ஹனோய், 25 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக வியட்நாமின் வட பகுதியில் எழுவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காணாமல் போன 10 பேரைத் தேடி மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 10 வீடுகள் அடுத்துச் செல்லப்பட்ட வேளையில், எட்டு வீடுகள் சேதமுற்றன.
ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், வியட்நாமின் பல பகுதிகளில் கனமழை பதிவு செய்யப்படும்.
இதனால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படும்.
கடந்த ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் 169 பேர் உயிரிழந்தனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான வானிலை மாற்றங்கள் பதிவு செய்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)