பொது

இந்திய அதிபர் திரௌபதி முர்முவை சந்தித்தார் அன்வார் இப்ராஹிம்

21/08/2024 05:57 PM

புது டெல்லி, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியாவிற்கு அதுகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மரியாதை நிமித்தம் இந்திய அதிபர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.

அச்சந்திப்பின்போது, இருவழி உறவுகள், மலேசியா-இந்தியா இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர், டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர், மரியாதை நிமித்தம் அன்வாரைச் சந்தித்துள்ளார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவு, தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)