பொது

தேசியக் கொண்டாட்டத்தில் மாமன்னர் தம்பதியர் பங்கேற்பு

31/08/2024 06:40 PM

புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவும் கலந்து கொண்டனர்.

நாட்டின் 17-வது மாமன்னராக பதவியேற்றப் பிறகு, சுல்தான் இப்ராஹிம் கலந்து கொள்ளும் முதல் தேசிய தினக் கொண்டாட்டம் இதுவாகும்.

காலை மணி 8-க்கு டத்தாரான் புத்ராஜெயாவை வந்தடைந்த மாமன்னர் தம்பதியை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டார் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.

தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பு, அரச பாரம்பரிய இசை முழங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)