பொது

மாமன்னரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு செயல்படுவீர் - ஃபஹ்மி

07/09/2024 06:30 PM

பந்தாய் டாலாம், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- குற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மீண்டும் திரும்ப பெறப்படும் என்று மாமன்னர் கூறியிருப்பது தெளிவான எச்சரிக்கை என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்திருக்கிறார்.

''மிகத் தெளிவான நினைவூட்டல். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைக்காதீர்கள். ஒரு முறை வழங்கப்பட்டால் கூட அது (விருது) எப்போதும் உங்களிடம் இருக்கும் என்று அர்த்தமல்ல. குறிப்பாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் குற்றத்தை நீங்கள் புரிந்தால்,'' என்றார் அவர். 

சனிக்கிழமை, கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் நடைபெற்ற மடானி காற்பந்து தினத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]