BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 பொது

சிறுவர்கள் வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கும் பெற்றோர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்

05/09/2024 06:58 PM

புத்ராஜெயா, 05 செப்டம்பர் (பெர்னாமா) -- சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

நேற்றிரவு சிரம்பான் தாமான் அரோவானா இம்பியானில் 10 வயது சிறுவன், தமது குடும்பத்திற்குச் சொந்தமான Toyota Corolla ரக காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி லோக் அவ்வாறு கூறினார்.

''அந்தச் சிறுவன் மீது குற்றம் சாட்ட முடியாது. ஒவ்வொரு குடும்பத்தை எவ்வாறு அமைச்சு கண்காணிக்கும். விருப்பம் போல் வாகனத்தைச் செலுத்த முடியாது என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். சாவி எவ்வாறு கிடைக்கும்? பெற்றோர்களைத் தவிர அதை வேறு யாரும் கட்டுப்படுத்த இயலாது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற மலேசிய விமான போக்குவரத்து கரிமம் அகற்றும் செயல் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர், அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம் செக்‌ஷன் 31 உட்பிரிவு ஒன்றின் கீழ்  உள்நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் ஏ.சி.பி. முஹமாட் ஹத்தா செ டின் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)