பொது

நீண்ட வரிசை வீடுகள் தீக்கிரை

13/09/2024 07:36 PM

செபாவோ, 13 செப்டம்பர் (பெர்னாமா) -- வியாழக்கிழமை, சரவாக், செபாவோ, சுங்கை லாபாங்கில் உள்ள நீண்ட வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவை முற்றாக தீக்கிரையாகின.

இச்சம்பவத்தால், 350 குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். 

நேற்று மாலை மணி 3.32-க்கு இச்சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு அழைப்பு கிடைத்ததாக சரவாக் மாநில தீயணைப்பு நடவடிக்கை மைய பேச்சாளர் தெரிவித்தார். 

23 கதவுகளைக் கொண்ட ரூமா நூரா  (Rumah Nura) பலகை வீடு 100 விழுக்காடு தீயில் அழிந்ததாக அவர் மேலும் கூறினார். 

அனைத்து குடியிருப்பாளர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

மாலை மணி ஐந்துக்கு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வேளையில், இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]