பொது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அறுவர் கைது 

30/09/2024 07:20 PM

மலாக்கா, 30 செப்டம்பர் (பெர்னாமா) -- பெர்னு, கம்போங் புக்கிட் லாராங்கில் கணவன் மனைவி தம்பதியிடமிருந்து வழிப்பறி கொள்ளையிட்டு அவர்களை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு ஆடவர்களையும் பெண் ஒருவரையும் மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகங்களின் குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்தது. 

பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகள் மற்றும் பாராங்கத்தியுடன் இருந்த அவர்கள் அனைவரும் மெர்லிமாவ்வில் செப்டம்பர் 26, 27-ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அதிகாலை மணி 2.30 அளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் 19 வயது மகள் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கிறிஸ்ட்ஃபர் பதிட் தெரிவித்தார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஏ.சி.பி கிறிஸ்ட்ஃபர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]