போஸ்னியா & ஹெர்சகோவினா, 05 அக்டோபர் (பெர்னாமா) -- கடும் வெள்ளம் காரணமாக போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில், அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக இது கருதப்படுகிறது.
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமுற்றுள்ளன.
சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள நிலையில் தொலைத் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]