சத்தீஸ்கர், 06 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிப் படைக்கும் போலீஸ் படைக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 31 மாவோயிஸ்ட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அதிக எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் கூறியது.
சம்பவ இடத்தில் இதுவரை 31 மாவோயிஸ்ட் உறுப்பினர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர்களின் அடையாளம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் அடிப்படையில் மாவோயிஸ்ட் படையின் உயர் தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் கூறுகிறது.
இவ்வாண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 180 மாவோயிஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய மாநில அரசாங்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]