கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் அமலில் உள்ள விற்பனை சேவை வரி எஸ்.எஸ்.டி தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அரிசி, பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது.
சால்மன் மீன், அவகாடோ போன்ற அதிநவீன இறக்குமதி பொருட்களுக்கு மட்டும் விற்பனை வரி விதிக்கப்படும்.
SST-வின் இந்த விரிவாக்கம் 2025 மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் புதிய வரி மூலம் கிடைக்கும் வருவாய், பொதுமக்களுக்கு பண உதவிகளை அதிகரிப்பதற்கும், கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் 2025 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)