பொது

புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும்

23/10/2024 07:52 PM

ஜோகூர் பாரு, 23 அக்டோபர் (பெர்னாமா) --  சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

அதற்காக, போக்குவரத்துத் துறை சரவாக் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதனால் சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து அமைச்சு சரவாக், சபாவில் புறநகர் விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, ஜோகூர் பாருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது லோக் அதனைக் கூறினார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)